Tuesday, June 2, 2015

ulaga paal dhinamum

 உலக பால் தினம்.

உலக நாடுகள் பாலை பற்றியும் பால் பொருட்கள் பற்றியும்  விழிப்புணர்வு ஏற்படுத்த  ஜூன் 1 தேதியை  பால் தினமாக  அனுசரித்து வருகிறது.
பதிவு அதை பற்றி அல்ல  ஆனால் பால் பற்றிதான் .

முதலிலையே நான் ஒன்றை தெளிவாக சொல்லிவிடுகிறேன். கடவுள் நம்பிக்கைகளிலும்  வழிபாடுகளிலும்  நம்பிக்கை  உள்ளவன் .நான்.  ஆனாலும் சில விஷயங்களை  என் மனம் ஒப்ப மறுக்கிறது. அதில் ஒன்று பிரதோஷம்

சமீப காலமாக  பிரதோஷ வழிபாடு  மிகவும் அதிகமாகவும் விமரி சையாகவும் கொண்டாடபடுகிறது.  ஏற்கனாவே நான் பலமுறை இதைப்பற்றி பதிவு செய்து விட்ட்டேன். இருந்தாலும்  உலக பால் தினம் பற்றி அறிந்ததிலிருந்து  பிரதோஷத்தின் மீதே கோபம் வருகிறது.   நான் வசிக்கும் குறிஞ்சி நகர் பகுதியில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடக்கும். ஆனால்  அபிஷேகம் என்ற பெயரில்  குடம் குடமாக பாலை ஊற்றுவது என்பது  எனக்கு சரியாக படவில்லை.  சோமாலி போன்ற நாடுகளில்  பட்டினியால் லட்சக்கணக்கான குழந்தை பால் கூட இல்லாமல் மடிகின்றனர். மறுபடியும் சொல்கிறேன்  நான் புரட்சி சமுதாயம்  என்றெல்லாம்  பேசவில்லை.  பக்தர்கள் எவ்வளவு பால் கொடுத்தாலும்  சிறிதளவு இறைவனுக்கு அபிஷேகம் நடத்தி விட்டு மீதமானதை  பக்தர்களுக்கோ , அல்லது அரசு  மருத்துவ  மனையில் உள்ள
பச்சிளம் குழந்தைகளுக்கோ  அல்லது ஆதரவு அற்ற குழந்தகளுக்கோ கொடுக்கலாமே.

பல நூல் படித்து நீ அறியும்  கல்வி      பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்   பிறர் உயர்வினிலே  உணகிருக்கும் இன்பம்   இவை அனைத்திலுமே  இருப்பதுதான்   தெய்வம் என்று உணர்ந்து  நம் பக்தியின் போக்கை பயனுள்ள பாதையில் திருப்பலாமே.

No comments:

Post a Comment