Tuesday, October 27, 2015

seena pattasu

சற்று சிந்தித்து  செயல்படுவோம்.

தேச சேவை செய்ய  வ வு சி போல்  செக்கிழுக்க தேவை இல்லை . பகத்சிங் சிங் போல் வீர மரணம் தேவை இல்லை  திருப்பூர்  குமரன் போல்  கொ டி காத்து  மரணிக்க தேவை இல்லை .   இன்றைய சூழலில் நம் செய்ய வேண்டியது  ஒரு சிறு செயல் தான்.  அதாவது  சீன பட்டாசுகளை  புறக்கணிப்பதுதான்..

நண்பர்களே  ஏற்கனவே  ஜவுளி துறை  பெரும் சரிவை சந்தித்து வருகிறது. கைத்தறி நெசவாளர்களின்  வாழ்வாதாரம்  கேள்வி குறியாக்கப்பட்டுவிட்டது.

விவசாய தொழிலாளர்களின் நிலை கேட்கவே வேண்டாம்.

பட்டாசு தொழிலை நம்பி  லக்ஷக்கனக்கானோர்  உள்ளனர் . இந்த நிலையில் சீனாவில் இருந்து பட்டாசு அதிக அளவில் இந்தியாவிற்குள்  நுழைந்துள்ளதாக ஊடகங்கள் தகவலாக தெரிவிக்கின்றன.   தீபாவளியை முன்னிட்டு அதிகமாக  செயல்படும் பட்டாசு கம்பனிகள்  , இப்போது உற்பத்தியை  குறைத்துள்ளதாம் . நமது நாட்டின் பொருளாதாரத்தை  அசைத்து பார்க்கும்  வண்ணம்   சீன  பட்டாசுகலின்  வரவு இருக்கிறது.

சீனா  ஏற்கனவே    நச்சுத்தன்மை வாய்ந்த பொம்மைகளை குறைந்த விலைக்கு  இந்தியாவில் விற்பனை  செய்ததாக செய்திகள் வெளியாகின.

சீனாவை பற்றி நம் எல்லோர்க்கும் தெரியும் .  

இன்னொன்று நண்பர்களே  சிவகாசி பட்டாசுகள்  தயாரிக்கப்படும் மூலப்பொருட்கள்  அவ்வளவாக ஆபத்தை விளைவிக்கா தது . ஆனால் சீன  பட்டா சுகலின் மூலப் பொருட்கள்  அதிக  ஆபத்தை  உண்டாக்ககூடியது  என்று  பத்திரிகளில் படித்து அறிந்தேன்.

எ னவே நாம் செய்ய வேண்டியது , லக்ஷக்கணக்கான  தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழிககச் செய்யும்  சீனப் பட்டாசுகளை  புறக்கணித்து
நம்மாலான கடமையை  ஆற்றுவோம்.  

No comments:

Post a Comment