Wednesday, April 22, 2015

puthaga dhinam

புத்தக தினம் .
சிறு வயது முதலே புத்தகம் , திரைப்படம்  பத்திரிகை வாசிப்பு  என்பது எனக்கு மிகவும்  பிடித்தமான ஒன்று  மட்டுமல்ல சலிக்காத ஒன்றும் கூட.
ஒரு படத்தில் சுஜாதா வசனம் எழுதி இருப்பார்.  நம் வாழ்க்கைக்கும் flash
back( rewind  பண்ணி   பாக்கிறமாதிரி )  வசதி  இருந்திருந்தா  எவ்வளவு  நல்ல இருக்கும்னு .  ஆனா எனக்கு கதைகள்  திரைப்படம்  இவைகளை பற்றி யோசிக்கும்போதே , புத்தகங்களையும்  கதைகளையும்  கட்டுரைகளையும்
அறிமுக படுத்திய  நண்பர்கள் அவர்கள் தொடர்பான நிகழ்வுகள் , ரசனையான நிமிடங்கள்  ரகளையான தருணங்கள்  அனைத்தும்  காட்சியாக  மனதில் விரியும் . அப்படி ஒரு தருணத்தின் பதிவே இது.

நான் படித்து  திரைப்படமான சில கதைகளை பார்ப்போம்.

1. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதை இன்றளவும் திரைப்படங்களில் ஒரு மைல்  கல்.  (தில்லான மோகனாம்பாள் )

2.   அகிலன் எழுதிய  கதை பாவை விளக்கு படம்.

3.    பெண் எழுத்தாளர்  லட்சுமி  எழுதிய  பெண் மனம்  படம்  நடிகர் திலகம் நடித்த இருவர் உள்ளம்.

4.  மகரிஷியின்  புவனா ஒரு கேள்விகுறி.

5.  சுஜாதாவின் ஏராளமான கதைகள்  சாம்பிளுக்கு  கரை எல்லாம் செண்பகபூ

6.  ஜெயகாந்தனின் பல கதைகள்  சாம்பிளுக்கு  .சில நேரங்களில் சில மனிதர்கள்.

 இன்னும் நிறைய  உடனடியாக  நினைவுக்கு வரவில்லை.

நிற்க, இந்த தருணத்தில் எனக்கு  புத்தகங்களை அறிமுகம் செய்த நண்பர்களை  நன்றியுடன் நினவு கூறுகிறேன்.  புத்தகம் வாசிப்பது  சிந்தனையை விரிவாக் க ம் செய்யும் என்பது என் அனுபவ உண்மை. .

கதை படிக்க என்னை  முதலில் தூண்டியது  தின தந்திதான் . அது அறிமுக படுத்திய  தொடர் கதையை  இன்றும் படித்து கொண்டிருக்கிறேன்.  ஆச்சர்யமாய் இருக்கிறதா    சிந்து பாத்  கதைதாங்க அது.

பள்ளி பருவத்தில்  அன்பு நண்பன்  அன்பழகன்   அம்புலி மாமா வாசகன் . இருவரும் சேர்ந்தே இருப்பதால்  அவனால் அம்புலி மாமா  எனக்கும் மாமா ஆனார்.

கொஞ்சம் வளர்ந்ததும்  இரும்புக்கை  மாயாவி  போன்ற சித்திர புத்தகங்கள் .

 பதின் பருவத்தில்  உதயசங்கர் , சேட்டு நண்பன்  தமிழ் அவ்வளவாக தெரியாது  அவன் எனக்கு  பிரபல ந டிகையின் பெயர் கொண்ட  புத்தகத்தை படிக்க கொடுத்தது  ஆச்சரியமான ஒரு விழயம் . நண்பா ராஜஸ்தானில் இருக்கும்  இது உன் கண்ணில் படாது என்று  எழுதி இருக்கிறேன்.

அப்புறம்  கல்லூரி அலுவலகம் என்று வந்த பிறகு , புலி பாய்ச்சலில்  புத்தக பயணம் தொடர்ந்தது.

எத தனை விதமான புத்தகங்கள்  எத தனை விதமான நண்பர்கள்.  மாறு பட்ட சிந்தனகைள்  வேறுபட்ட கோணங்கள் .

pride and prejudice    oliver twist  endra kathaigalai  எப்போதும் சிலா கித்துகொண்டஇருக்கும்  கல்லூரி நண்பன்  மகாதேவன் (பொதுத்துறை வங்கியில்  உயர்  பதவியில் )  தொல்லை தாங்காமல் படித்து ?? முடித்தேன்.
பின்னர் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்  மற்றும் அநாதை ஆனந்தன் படங்களை பார்த்த போது   மேற்கண்ட கதைகள் புரிய ஆரம்பித்தது. .

அந்த காலகட்டத்தில் இலக்கிய வட்டம் என்ற பெயரில்  சிறு சிறு குழுக்கள்
கூட்டம் போட்டு  கதைகளை பற்றி விவாதங்களும் விமர்சங்களும் செய்ய ஆரம்பித்தன.





1 comment:

  1. இந்த பயணம் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்...

    ReplyDelete