Wednesday, May 23, 2012


மதிப்பெண் மனோபாவம் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்  வெளியாகிவிட்டது . எதிர்பார்ப்புகள்ஏமாற்றங்கள்
ஆச்சரியங்கள், அதிசயங்கள்  இன்னும் பல்வேறு உணர்வுகளின் கலவையாக 
வெளிவந்துவிட்டது பிளஸ் 2 முடிவுகள் . ஒரு பார்வையாளனாக  இதை பார்க்கும்போது  இவ்வளவு உணர்வுகள்  தேவைதானா .  1076 மதிப்பெண் பெற்ற 
மாணவன் ஒருவன் வீடு  சோகமயமாக காட்சி அளித்தது . இந்த மதிப்பெண் போதாதாம் .  இந்த பெற்றோர்கள என்ன   எதிர்பார்கிறார்கள்.

வெற்றிபெற்ற மாணவனுக்கு  அதில் சந்தொஷபடுவதற்கு கூட  இடம்  கொடுக்காத  சமூகம்  .

தோல்வி   அடைந்தவனை தூக்கி எரிய நினைக்கும்  சமூகம் 

இரண்டும் மாறி  கல்வி சுமையாகஇல்லாமல்  சுவையாக மாறும் காலம்  வருமா 


No comments:

Post a Comment