சுழித்து ஓடும் ஆறு . இரு கரையிலும் நாணல் சலசலவென்று தாள நயத்துடன் தண்ணீர் பாய்தல். பதின் வயது நண்பர்களுடன் . பெண்கள் புது துணி அணிந்து வண்ண வண்ண மலர்கள் சூடி ஆண்கள் வேட்டியை மடித்துக்கொண்டு பாத்திரங்களை சுமந்து கொண்டு ஆற்றங்கரையில் வைக்க அவரவர் குடும்பங்களுடன் அமர மந்தார இலையும் தாமரை இலையும் தரப்பட அதில் கலந்த சாதங்கள் பரிமாறப்பட உற்சாகத்தின் உச்சத்தில் அனைவரும் மகிழ ஒரு ஆடி பதினெட்டு. மேலே சொன்னது பொன்னியின் செல்வன் நாவலில் வரும் காட்சி அல்ல நான் நானே சிதம்பரத்தில் எங்கள் கிராமத்தில் அனுபவித்தது.
இன்றும் ஆடிதான் . வறண்ட காற்றில் மோட்டார் வாகன் இரைச்சளுடன ஆடி தள்ளுபடி விளம்பரங்களை பார்த்து கொண்டிருக்கிறேன். . தூரத்தே ரசீது புத்தகத்துடன் பேய் கூச்சலில் எல் ஆர் ஈஸ்வரியை அலறவைத்துகொண்டு சிலர் வருகிறார்கள் நான் அப்புறம் பாக்கிறேன். வாழ்க ஆடி.
No comments:
Post a Comment