Friday, June 10, 2016

ஒரு நாள்  கூத்து ====== திரைப்பார்வை

மூன்று பெண்களின்  கதை . சமீப  காலமாக  பெண்களை முன்னிறுத்தி  பெண்ணியம்  பேசும்  கதைகள் வந்ததில்லை.  அப்படி சில படங்கள் வந்திருப்பதாக  சொன்னால்  அவை  பெண்ணிய  படங்களே  அல்ல.

தெளிவாக,  அழகாக , அந்த மூன்று பெண்களின் குடும்பத்தில் நாமும்  ஒரு பார்வையாளாராக  நம்மை  கட்டி போட்டதே  இயக்குனரின்  வெற்றி.
என்ன  ஒரு  அளவான நடிப்பு.

எனக்கு டைரக்டர்  ஸ்ரீதர் ,  பாலச்சந்தரின்  படங்களை   தற்கால  சூழலில்  பார்ப்பது  போன்ற  உணர்வு  ஏற்பட்டது.  கடைசி காட்சியில்  வீட்டை விட்டு வெளியேறிய பெண்  திரும்ப வீட்டுக்கு  வரும்போது , அனைவரும்  அவளை பார்க்கும்போது   இப்ப  என்னாச்சி என்று  தண்ணீரில்  முகத்தை கழுவும்போது   ஜெயகாந்தன் நினைவுக்கு  வந்தார்.

.. தலைமுறை காரணமாகவோ  என்னவோ   என்னால் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் காட்சியை (ஆபாசமற்று இருந்தாலும்) ஏற்க முடியவில்லை..

மற்றபடி  அத்தி  பூத்தது போல்  ஒரு  கதையின்  போக்கிலேயே  பெண்ணியம்  பேசும்    நல்ல  படம் . 

No comments:

Post a Comment